மொட்டைக்கு…. காதுகுத்துக்கு…
ஞானஸ்தானத்துக்கு ….பூப்பு நன்னீராட்டுக்கு….. கல்யாணத்துக்கு….
கருமாதிக்கு என எல்லாமே ஆடம்பரமாயிற்று இங்கே. அதனால்தான் மீண்டும்
மீண்டும் பணத்தைத் தேடி ஓட வேண்டியிருக்கிறது. உழைக்கும் நேரம் போதாது போகிறது.
அத்தியாவசியம் எது? ஆடம்பரம்
எது ? எனப் பிரித்துப் பார்த்து தீர்மானிக்கும் புத்தியும் நமக்குத்
தேவையாய் இருக்கிறது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக எதையும் வாங்கிக்
குவிக்க வேண்டியதில்லை. பாதிப்பணத்துக்குக் கிடைக்கிறது என்பதற்காக ”அந்தப்
பத்து யானையையும் பந்தல்காலில் கட்டி வைத்து விட்டுப் போ” என்கிற
டாம்பீகமும் அவசியமில்லை.
வாழ்க்கை முறை எளிதாகும்போது தேவைகள் குறையும்.
தேவைகள் குறையும் போதுதான் பிழைப்புக்கான ஓட்டம் குறைந்து நமக்கான வாழ்க்கையை
வாழத்துவங்குவோம் நாம்.
...
அந்த வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கு…….
24 செக் லீப்…..
ரெண்டு சாட்சிக் கையெழுத்து……
ரெண்டு சூரிட்டி என எதுவும் தேவையில்லை.
ஒரே தேவை : “போதும்”
என்கிற மனசு.
No comments:
Post a Comment